புத்தகங்களை இயற்றிய கவிகளுக்கு வணக்கம் !
என் கவிதை சிந்தனையில் கண் துறந்தாய் !
ஞானமாய் வந்து நல்லறிவு புகட்டவே
நன் நூல்களை தந்தாய்!
கால திருத்தங்களுக்கு தகுந்தார் போல் நன் நூல்களை
என் அறிவுக்கு புகட்டும் வகையில் இயற்றினாய்!
நான் படித்து சென்ற பாதையெலாம்
உன் நினைவுகள் நிற்க செய்தாய்!
புது புது படைப்புக்களை உருவாக்கி
உன்னை போல தினம் ஒரு கல்வி ஆசானை உருவாக்கும்
உங்களை வணங்குகிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
நீங்கள் படித்து பார்த்து உங்கள் கருத்துகளை எழதுங்கள்